கர்நாடகவில் பறவைக் காயச்சல் ஏற்பட்டுள்ளதால், அதன் எதிரொலியாக தமிழகத்தில் கறிக்கோழி விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களளூருவில் உள்ள தசரஹள்ளி பகுதியில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் நாட்டுக்கோழிகள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இறந்தன.
இது குறித்து ஆய்வு நடத்திய தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் ஆராய்ச்சி மையம், பறவை காயச்சல் நோய் பரவியுள்ளதாக எச்சரித்தது.
தொடர்ந்து இறந்த கோழிகளை ஆய்வு செய்த, உலக சுகாதார நிறுவனம், எச்5 என் 8 என்ற பறவை காய்ச்சலுக்கு உண்டான வைரஸ் இருப்பதை உறுதி செய்தது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ளள 900 கோழிக்கடைகள் மூடப்பட்டது.
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள இந்த பறவைக் காய்ச்சல் நோயின் எதிரொலியாக, தமிழகத்தில் கறிக்கோழி விலை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த 17ம் தேதி ஒரு கிலோ கறிக்கோழி விலை 79 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 69 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களளூருவில் உள்ள தசரஹள்ளி பகுதியில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் நாட்டுக்கோழிகள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இறந்தன.
இது குறித்து ஆய்வு நடத்திய தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் ஆராய்ச்சி மையம், பறவை காயச்சல் நோய் பரவியுள்ளதாக எச்சரித்தது.
தொடர்ந்து இறந்த கோழிகளை ஆய்வு செய்த, உலக சுகாதார நிறுவனம், எச்5 என் 8 என்ற பறவை காய்ச்சலுக்கு உண்டான வைரஸ் இருப்பதை உறுதி செய்தது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ளள 900 கோழிக்கடைகள் மூடப்பட்டது.
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள இந்த பறவைக் காய்ச்சல் நோயின் எதிரொலியாக, தமிழகத்தில் கறிக்கோழி விலை தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த 17ம் தேதி ஒரு கிலோ கறிக்கோழி விலை 79 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 69 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.