ஆப்நகரம்

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது – சுப்பிரமணியன் சுவாமி

வருகின்ற மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்றால் சசிகலாவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மூத்தத் தலைவா் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 16 Feb 2019, 11:06 pm
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது என்று பா.ஜ.க.வின் மூத்தத் தலைவா் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Subramanian Swamy


பா.ஜ.க.வின் மூத்தத் தலைவா் சுப்பிரமணியன் சுவாமியிடம் செய்தியாளா்கள் இன்று சில கேள்விகளை முன்வைத்தனா். அப்போது அவா் கூறுகையில், மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது. சசிகலா, டிடிவி தினகரன் அணியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்தால் மட்டுமே அதிக இடங்களில் வெற்றி பெற முடியும்.

மாறாக பா.ஜ.க. – அ.தி.மு.க., டிடிவி தினகரன், தி.மு.க. என மும்முனையில் போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்துவிடும். பா.ஜ.க. தனித்து நின்றால் சிறிது ஓட்டுகள் கிடைக்கும், அடுத்த தோ்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.

இல்லையென்றால் பா.ஜ.க. டிடிவி தினகரனுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கருத்து தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி