ஆப்நகரம்

சட்டவிரோத பேனரை அகற்ற வந்த அதிகாரிக்கு நேர்ந்த கதி! தஞ்சையில் பாஜக அடாவடி

தஞ்சையில் சட்டவிரோதமாக பாஜகவினர் அமைத்திருந்த பேனரை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரியிடம் தள்ளு முள்ளு

Samayam Tamil 5 Aug 2021, 8:32 pm
கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதை எதிர்த்து தமிழக பாஜக குரல் எழுப்பி வருகிறது. அண்மையில் மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது என்றும் கர்நாடக அரசை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Samayam Tamil twitter video


அவரது கருத்திற்கு எதிர்வினையாற்றிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலளிப்பது என் வேலை அல்ல என்றும் யாராவது உண்ணாவிரதம் இருக்கட்டும் இல்லையே உண்ணட்டும் என்றும் தடாலடியாக கூறினார்.

அதனை தொடர்ந்து தஞ்சாவூரில் இன்று பாஜக மாநில தலைவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் போராட்டம் நடத்தினார். இந்த நிகழ்வுக்காக பாஜக சார்பில் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சட்டவிரோதமாக பேனர்களை வைத்திருந்ததாக அவற்றை அகற்றுவதற்கு மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் வந்ததாக தெரிகிறது.


'அன்னைத் தமிழில் அர்ச்சனை' திட்டம் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தொடக்கம்!

அப்போது அங்கிருந்த பாஜக மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ மற்றும் தொண்டர்கள் அதிகாரியை சூழ்ந்துகொண்டு பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில் போலீசார் இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி