ஆப்நகரம்

சும்மா குறை சொல்லாதீங்க; தமிழக அரசை நாங்க எதும் பண்ணல: தமிழிசை

தமிழக அரசை நாங்கள் முடக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

TNN 30 Apr 2017, 3:06 pm
சென்னை: தமிழக அரசை நாங்கள் முடக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil bjp didnt done anything to tamilnadu govt says tamilisai
சும்மா குறை சொல்லாதீங்க; தமிழக அரசை நாங்க எதும் பண்ணல: தமிழிசை


சென்னை சூளையில் அங்காளம்மன் கோவில் தெருவில் புதிதாக தண்ணீர் பந்தலை, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை திறந்து வைத்தார். அப்போது பொதுமக்களுக்கு அவர் மோர் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, தமிழக அரசை பாஜக முடக்கி வருவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே முடக்கிப் போயுள்ள அரசை, நாங்கள் முடக்குவதாக கூறுவது அர்த்தமற்ற வாதம் என்று கூறினார். தங்களுக்கு மக்கள் நலப் பணிகள் ஏராளமாக இருப்பதாகவும், அரசை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடிய விவசாயிகளுக்கு அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ள அவர், சென்னை திரும்பியுள்ளார். இங்கு வந்தவுடன் நேரே தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசி இருக்க வேண்டும். ஆனால் அதைவிடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறினார். அதிலிருந்து விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் திமுக இருப்பது தெளிவாகத் தெரிவதாக குறிப்பிட்டார். அதன் மூலம் திமுக சிறந்த எதிர்க்கட்சியாக நடந்து கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

BJP didn't done anything to Tamilnadu Govt says Tamilisai.

அடுத்த செய்தி