ஆப்நகரம்

'பொறுக்கி'.. திமுக அமைச்சரை மோசமாக சாடிய ரெட்டி.. அதிருப்தியில் உ.பி.க்கள்..!

பாஜக அமர் பிரசாத் ரெட்டி அமைச்சர் மனோ தங்கராஜை டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 29 May 2023, 12:09 pm
அமைச்சர் மனோ தங்கராஜை பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி ஒருமையில் கேவலமாக சாடியிருப்பது திமுகவினரை சூடேற்றியுள்ளது.
Samayam Tamil amar prasad reddy


பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவராக இருப்பவர் அமர் பிரசாத் ரெட்டி. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதற்கு பின்னர் லைம் லைட்டில் தொடர்ந்து நீடித்து வருகிறார் அமர் பிரசாத் ரெட்டி. பாஜகவையோ, அண்ணாமலையையோ யாராவது விமர்சித்தால் பாரபட்சம் பார்க்காமல் கடுமையான வார்த்தைகளால் சாடுவது ரெட்டியின் வழக்கம்.

இந்த நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்தபோது செங்கோலை பார்த்தபடி தரையில் விழுந்து வணங்கினார். அந்த புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தை வைத்து மீம்ஸ்களும் பகிரப்பட்டன. இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமரின் புகைப்படத்தை விமர்சித்து ட்வீட் போட்டார். அந்த ட்வீட்டில் ' மூச்சு இருக்கா? மானம் ரோஷம் இருக்கா?' என்று கூறியிருந்தார்.


இதனால் ஆவேசமான ரெட்டி அமைச்சர் மனோ தங்கராஜை மிக கொச்சையான வார்த்தையை பயன்படுத்தி ' ஒழுங்கா நாளைக்கு அறிவாலயத்தில் போய் ஒளிஞ்சிக்க' என்று கூறினார். இந்த ட்வீட் திமுகவினரை கடுப்பேற்றியுள்ளது. அவருக்கு பதிலடி கொடுத்து ட்வீட்டில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தளபதியாகவும், தீவிர விசுவாசியாகவும் காட்டிக்கொள்ளும் அமர் பிரசாத் ரெட்டி மீது பாஜக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக நீண்ட நாட்களாகவே பேச்சுக்கள் இருந்து வருகிறது. அண்ணாமலையை சந்திக்க வேண்டுமென்றால் என்றாலும், தனிப்பட்ட விஷயங்களுக்காக கோரிக்கை வைக்க வேண்டுமென்றாலும் ரெட்டியின் இடையூறு இருப்பதாகவும் சொல்கின்றனர்.

மேலும், அண்ணாமலைக்கு இது தெரிந்தே நடப்பதாகவும் மூத்தவர்களின் அறிவுரைகளில் இருந்து தள்ளி இருக்க இபப்டி ஒரு செட்டப் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலையின் புள் சப்போர்ட் இருப்பதால் திமுக அமைச்சர்களை கூட ரெட்டி வெளுத்து வாங்குகிறாராம்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி