ஆப்நகரம்

தமிழகத்தின் வரலாற்றை மறைக்க முயற்சிக்கும் பாஜக அரசு; கீழடியில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கீழடியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 5 Feb 2019, 2:51 pm
சிவகங்கை மாவட்டம், கீழடியில் திமுகவின் ஊராட்சி சபைக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கீழடி ஊராட்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓர் இடம். இங்கு வந்தது எனக்கு மிகவும் பெருமையான ஒன்று.
Samayam Tamil MK Stalin


மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நானும் பங்கேற்றேன். அங்கு அனைவரும் வியப்பாக கேட்ட ஒரு விஷயம் ஊராட்சி சபைக் கூட்டம். இதுகுறித்த அடிப்படையை விளக்கிக் கூறியவுடன், அனைத்து தலைவர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அத்தகைய கிராம சபைக் கூட்டங்களை நடத்தும் திமுகவிற்கு பாராட்டு தெரிவித்தனர். பாஜக ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாட்டின் வரலாற்றின் மறைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே கீழடி அகழாய்வை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளில் தமிழகத்தில் ஒன்றைக் கூட நிறைவேற்றாத மோடி அரசு. நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவன். எனவே கிராமங்களுடன் ஒன்றிப் போனவன். அதனால் கருணாநிதி மகன் ஸ்டாலின் என என்னை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வர்.

ஆனால் பழனிசாமி தனியே நடந்து வந்தால், யாரும் அடையாளம் காண மாட்டார்கள் என்று கூறினார். பின்னர் கீழடி அகழாய்வு பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அடுத்த செய்தி