ஆப்நகரம்

சேகர் பாபுவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஹெச்.ராஜா

அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை விமர்சித்துப் பேசியுள்ளார் பாஜக ஹெச்.ராஜா.

Samayam Tamil 6 Nov 2021, 6:46 am
அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அத்துறை மூலம் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் பாஜக ஹெச்.ராஜா மட்டும் தொடர்ந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசிவருகிறார்.
Samayam Tamil h raja


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தியநாத சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் விலை ரூ.5 டீசலுக்கு ரூ.10 குறைத்துள்ளது.
இது திராவிட மாடல் ஆட்சி: கி.வீரமணி சர்டிஃபிகேட்!
மத்திய அரசு தனது கலால் வரியை குறைத்துள்ளது. பாஜக ஆளும் 9 மாநிலங்களில அரசுகள் குறைத்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி ஆட்சியை பிடித்த ஊராட்சி அரசு தனது மாநில அரசு வரியை குறைத்து தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.

கோவில் அபகரிப்பில் திமுக அரசு ஈடுபட்டுவருகிறது. ஆட்சிக்கு வந்து ஐந்தரை மாதங்களில் பல்வேறு கோவில்களை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. அறநிலையத்துறை சட்டம் 1953இன் படி செயல்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். அறநிலையத் துறை ஒரு கோவில் சரியாக நிர்வாகம் செய்யப்படவில்லை என்றால் எடுத்து சரிசெய்து அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் பழைய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இடதுசாரிகளை கொண்டாடிய ஜெய் பீம்.. இது அரிது.. சபாஷ் போட்டுப் பாராட்டலாம்!
ஆனால் 60 ஆண்டுகள் 70 ஆண்டுகள் கோவிலை அபகரித்துக்கொண்டு நகைகளை கபளிகரம் செய்யக் கூடாது. அதனால் சட்டப்படி அறநிலையத் துறை கோவில்களை எடுத்துக்கொள்ள முடியாது. அமைச்சர் அறநிலையத்துறையின் கீழ் எத்தனை கோவில்கள் உள்ளன என்று கூட தெரியாத நிலையில் உள்ளார்.

நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வழக்கறிஞர் கார்த்திகேயன் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளதாக அப்போது தெரிவித்தார். சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர் பாபு 38 ஆயிரத்து 667 கோவில் உள்ளதாக கூறியுள்ளார். அப்படி என்றால் மீதி 5454 கோவில்கள் எங்கே?

தனது துறை ரீதியான ஞானம் இல்லாதவராக அறநிலையத் துறை அமைச்சர் உள்ளார். அறநிலையத்துறை தனது வரம்புமீறி செயல்படுகிறது. கோவில்களை அறநிலையத்துறை அரசு எடுத்துக் கொள்வதை நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்று கூறினார்.

அடுத்த செய்தி