ஆப்நகரம்

மக்களுக்கு பாஜக தூரோகத்தை தவிர வேறெதுவும் செய்ததில்லை : விஜயகாந்த்

பாஜக எப்போதும் மக்களுக்கு துரோகம்தான் செய்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 20 Apr 2018, 2:04 pm
பாஜக எப்போதும் மக்களுக்கு துரோகம்தான் செய்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil BL11VIJAYAKANT_2769580f



பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர், சென்னை சைதாபேட்டையில் இருந்து ஆளுநா் மாளிகை நோக்கி பேரணி சென்றனா்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாவது, பெண்களுக்கு எதிரான வழக்குகளில், பாஜக முதல் இடம் பிடித்துள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறது. இதுவரை பாஜக மக்களுக்கு தூரோகத்தை தவிர எதையும் செய்ததில்லைஎன்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேரணியாக சென்ற விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி