ஆப்நகரம்

ஹெச்.ராஜா கைது : சட்டம் ஒழுங்கு பிரச்சினை- காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

போலீசாரின் தடையை மீறி பொதுக்கூட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 15 Mar 2023, 6:37 am
பாஜக சார்பில் திண்டிவனத்தில் இன்று (மார்ச் 14) நடைபெற இருந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். எனினும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காரைக்குடியிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார்.
Samayam Tamil h raja arrest


அப்பொழுது கடலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே கடலூர் மாவட்ட போலீசாரும், பெரம்பலூர் மாவட்ட போலீசாரும் ஹெச்.ராஜாவின் காரை தடுத்து நிறுத்தினர்.

திண்டிவனத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அனுமதி வாங்கவில்லை எனவே அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனத் தெரிவித்தனர்.
பாஜக அண்ணாமலை ஒரு கத்துகுட்டி: காட்டமாக விமர்சித்த கடம்பூர் ராஜு
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெச்.ராஜாவை கைது செய்தனர். இதனையடுத்து அவரை விடுவிக்கக்கோரி பாஜகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் அவருடன் வந்த 500க்கும் மேற்பட்ட பாஜகவினரையும் கைது செய்தனர்.

அனைவரும் ராமநத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். முன்னதாக அங்கு வந்த ஹெச்.ராஜாவிற்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழக அரசு செய்யும் சாதனைகள்: பட்டியலிட்ட ஸ்டாலின்
அதே போல் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராகிம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகே கைது செய்யப்பட்டார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி