ஆப்நகரம்

ரஃபேல் உள்ளிட்ட அனைத்திலும் பொய் கூறும் பாஜக; வசந்தகுமார் தாக்கு!

ரபேல் விவகாரம், பிரதமரின் ரூ.40 ஆயிரம் கோடி திட்டம் உள்ளிட்ட அனைத்திலும் பாஜகவினர் பொய் கூறி வருவதாக காங்கிரசின் ஹெச்.வசந்தகுமார் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2019, 3:21 pm
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் ஒருவரான வசந்தகுமார் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு புயல் பாதிப்புகளின் போதும், பிரதமர் எந்தவித உதவியும் செய்யவில்லை.
Samayam Tamil bjp lies rafale and all welfare schemes says vasanthakumar
ரஃபேல் உள்ளிட்ட அனைத்திலும் பொய் கூறும் பாஜக; வசந்தகுமார் தாக்கு!


அவர் எப்படி வந்து வாக்கு கேட்பார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ஏற்கனவே மஞ்சள் கடுதாசி கொடுத்த நிறுவனத்திற்கு வழங்கினார்கள். உச்சநீதிமன்றத்தில் கூட ஆவணங்கள் தொலைந்து விட்டது என்று கூறிய இவர்கள், தற்போது அதன் நகல் கிடைத்துள்ளது என்று கூறுகிறார்கள்.

அப்போது இந்த ஆவணத்தை திருடியது நிர்மலா சீதாராமனா? ராணுவ அதிகாரிகளா? மோடி உட்பட பாஜகவினர் அனைவரும் பொய் சொல்லி வெற்றி பெற நினைக்கிறார்கள்.

இதற்கிடையில் குமரியில் மோடி அறிவித்த ரூ.40 ஆயிரம் கோடிக்கான திட்டம் குறித்தும் எந்த விவரமும் தெரிவிக்க வில்லை. இதுகுறித்து நான் கேட்டால் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் என்னை நாங்குநேரிகாரன் என்று கூறுகிறார்.

நான் குமரியின் அகஸ்திஷ்வரம் பகுதியை சேர்ந்தவன் தான். இனியேனும் அவர் பொய் பேசுவதை தவிர்த்துவிட்டு உண்மை பேச வேண்டும் என்று கூறினார்.

அடுத்த செய்தி