ஆப்நகரம்

மைக்கேல்பட்டி மாணவி மரணம்: திமுகவை தாக்கும் பாஜக விஜயசாந்தி

மைக்கேல்பட்டி மாணவி மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினரை சந்திக்க பாஜகவைச் சேர்ந்தவர்கள் நேற்று தமிழ்நாடு வந்தனர்.

Samayam Tamil 2 Feb 2022, 8:04 am
பாராளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா தாய் வாக், கர்நாடக மாநில மகிளா மோர்ச்சா தலைவி கீதா விவேகானந்தா ஆகியோர் அரியலூர் மாவட்டத்தில் மரணமடைந்த மாணவி லாவண்யாவின் குடும்பத்தினரை சந்திக்க தமிழகம் வந்திருந்தனர்.
Samayam Tamil vijaya shanthi


நேற்று காலை சாலை வழியே வடுகன் பாளையம் கிராமத்திற்குச் சென்று மரணமடைந்த லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மற்றும் தாயார் குடும்பத்தினரை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர்களுடன் தங்கியிருந்து உரையாடினர். முன்னதாக உயிர்நீத்த மாணவியின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயசாந்தி, “மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை. பெண்ணின் மரணத்தைப் பற்றி இதுவரை திமுக ஏன் வாய் திறக்கவில்லை. எந்த ஊடகமும் இதை விவாத பொருளாக எடுக்கவில்லை. பிற கட்சிகள் மௌனமாக இருப்பதால் பாரதிய ஜனதா கட்சி பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேசாவிட்டால் இந்த இளம்பெண் மரணத்திற்கு என்ன பதில். இதுவரை ஏன் தமிழக முதல்வர் இந்த மரணத்திற்கு இன்னும் வாய் திறக்கவில்லை.
நோட்டாவை விட கம்மியாக ஓட்டு வாங்குகிற ஒரு கட்சி: முதல்வர் ஸ்டாலின் செம கலாய்!
அரசியல் ஆதாயம் கிடைக்கிறது என்று சொல்லத் தெரிந்த ஸ்டாலின்தான் அரசியல் ஆதாயம் தேடுகிறார். கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு மாநிலத்தில் ஒரு இளம்பெண் மரணத்திற்காக தன்னுடைய அனுதாபத்தை தெரிவிக்க மனம் இல்லாத திமுக தான் அரசியல் செய்கிறது. திமுக இன்னும் மாறவில்லை, திமுகவைப் பற்றி நான் மிக நன்றாக அறிவேன்” என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் உரையை கிழித்தெடுத்த எம்.பி: இப்படியொரு சம்பவமா!
பின்னர் அவர்கள் தஞ்சாவூர் சென்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகிய இருவரையும் சந்தித்து பேசினர்.

அடுத்த செய்தி