ஆப்நகரம்

விதிமீறும் எச். ராஜா, கண்டுகொள்ளாத போலீஸ்!

சிவகங்கையில் பாஜக நடத்திய பேரணியில், எச். ராஜா வண்டியில் அமர்ந்திருந்த போலீஸ் உள்பட, அந்த பேரணியில் பங்கேற்ற பலர் ஹெல்மெட் அணியவில்லை. இதைக் கண்டு கொள்ளாத போலீஸார், பாதுகாப்பு மட்டும் வழங்கினர்.

Samayam Tamil 23 Jan 2020, 10:43 pm
சமீப நாட்களாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் காவல் துறையினர் மடக்கிப் பிடித்து அபராதம் விதித்து விடுகின்றனர். இதற்காகப் பயந்தே பலர் இன்று ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பயணித்து வருகின்றனர்.
Samayam Tamil Untitled


குறிப்பாக இப்போதைய நேரத்தில்தான் ஹெல்மெட் விவகாரத்தில் போக்குவரத்து காவலர் கட்சியினர் என்றோ, அரசு ஊழியர் என்றோ பாரபட்சம் பார்க்காமல் அபராதங்களை முறையாக விதித்து வசூலித்து வருகின்றனர்.

இந்த சூழலிலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜகவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விதிகளை மீறி பேரணியாகச் சென்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நாடு முழுவதிலும் ஒரு மாதத்திற்கு மேலாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடந்து வருகிறது.

“இப்பதான் அவரே கருத்து சொல்றாரு” ரஜினியைக் கலாய்த்த கஸ்தூரி!

தொடரும் எதிர்ப்புகள் ஒருபுறமிருக்க, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மாநிலந்தோறும் பேரணிகள், கூட்டங்கள் நடத்தி சட்டம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறது.


இதன் தொடர்ச்சியாகச் சிவகங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையில் இருசக்கர வாகனத்தில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்து கொண்ட எச். ராஜா அரசு அறிவுறுத்திய ஹெல்மெட்டை அணியவில்லை. எச். ராஜாவுக்குப் பாதுகாப்பாக வண்டியில் பின்னால் ஏறி உட்கார்ந்த காவலர் ஹெல்மெட் அணியவே இல்லை.

பெரியாரை பற்றி ரஜினிக்கு என்ன தெரியும்? -துரைமுருகன் அதிரடி கேள்வி!!

அதே வேளையில், பின்னால் சுமார் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் யாருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்த வீடியோ செய்திகளில் ஒளிபரப்பப்பட்ட நிலையிலும், ஹெல்மெட் விதிமீறல் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.

மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜகவின் தேசிய செயலாளர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்களைப் பெற்று வருகிறது.

அடுத்த செய்தி