ஆப்நகரம்

நாடே பாஜகவை ஊழல் கட்சி என்கிறது - தாக்கும் அதிமுக தளவாய் சுந்தரம்

அமித்ஷா அதிமுக ஊழல் கட்சி என கூறுகிறார்.ஆனால் நாடே பாஜகவை ஊழல் கட்சி என்று கூறுகிறது. தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேட்டி

Samayam Tamil 21 Jan 2019, 11:31 pm
அமித்ஷா அதிமுக ஊழல் கட்சி என கூறுகிறார்.ஆனால் நாடே பாஜகவை ஊழல் கட்சி என்று கூறுகிறது. தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேட்டி

மொழிப் போர் தியாகி சிதம்பரநாதன் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை பேருராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநதி தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறும் போது.

தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நேரத்தில் அம்மையார் ஜெயலலிதா மோடியா லேடியா என கேட்டார் .ஆனால் தற்போதைய அரசியலில் அந்த நிலைமை இல்லை.

இட ஒதுக்கீடு கொள்கை விஷயத்தில் தற்போது வழங்கிய இட ஒதுக்கீடு என்பது முற்பட்ட சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வழங்க படுகிறது.
இது திராவிடத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது இல்லையா என்ற கேள்விக்கு.
இது மாநில அரசு எடுத்த முடிவு இல்லை என்றும் மத்திய அரசு எடுத்த முடிவு என்று கூறிய அவர் ஓகி புயலில் மத்திட அரசு வழங்கிய நிதி போதுமானதாக இல்லை என தெரிவித்த அவர்.அமித்ஷா அதிமுக ஊழல் கட்சி என கூறுகிறார்.ஆனால் நாடே பாஜகவை ஊழல் கட்சி என்று கூறுகிறது.எனவும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி