ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, திருச்செந்தூர் அருகே பரப்புரை மேற்கொண்ட மதிமுக தலைவர் வைகோ மீது பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூரில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மதிமுக தலைவர் வைகோ பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மூன்றாம் நாளாக பரப்புரை மேற்கொள்ள வந்த வைகோவுக்கு கறுப்புக்கொடி காட்ட, உடன்குடி பஜாரில் பாஜக கட்சியினர் காத்திருந்தனர்.
இதனால், போலீசார் வைகோவிடம் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு மறுப்புத் தெரிவித்த வைகோ, ஏற்கனவே திட்டமிட்ட பாதையிலேயே சென்றார். அப்போது, பாஜகவினரைக் கண்ட வைகோ, கறுப்புக்கொடிக்கு பயந்து மோடி போல் ஓட மாட்டேன் என வம்பிழுத்தார். இதில் ஆத்திரமடைந்த பாஜகவினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் போது, பாஜகவினர் வைகோ மீது கற்களை வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த மோதலில் காயமடைந்த பாஜகவினர் 6 பேர் திருச்செந்தூர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூரில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மதிமுக தலைவர் வைகோ பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மூன்றாம் நாளாக பரப்புரை மேற்கொள்ள வந்த வைகோவுக்கு கறுப்புக்கொடி காட்ட, உடன்குடி பஜாரில் பாஜக கட்சியினர் காத்திருந்தனர்.
இதனால், போலீசார் வைகோவிடம் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு மறுப்புத் தெரிவித்த வைகோ, ஏற்கனவே திட்டமிட்ட பாதையிலேயே சென்றார். அப்போது, பாஜகவினரைக் கண்ட வைகோ, கறுப்புக்கொடிக்கு பயந்து மோடி போல் ஓட மாட்டேன் என வம்பிழுத்தார். இதில் ஆத்திரமடைந்த பாஜகவினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் போது, பாஜகவினர் வைகோ மீது கற்களை வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த மோதலில் காயமடைந்த பாஜகவினர் 6 பேர் திருச்செந்தூர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.