Bjp Secret Survey About Erode East Byelection To Be Submitted In Delhi
ஈரோடு கிழக்கு: சீக்ரெட் சர்வே நடத்திய பாஜக... டெல்லி பறக்கும் ரிப்போர்ட்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு தொடர்பாக பாஜக சார்பில் சீக்ரெட் சர்வே ஒன்று நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Authored byமகேஷ் பாபு | Samayam Tamil22 Jan 2023, 6:45 am
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விஷயம் ஹாட் டாபிக்காக தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் என மூன்று கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்த தயாராகி விட்டன. இதையடுத்து பாஜக, அமமுக, தேமுதிக ஆகியவை ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வருவதால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் தங்கள் ஆதரவு வேட்பாளரை களமிறக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைபேசி உரையாடல்
பாஜகவை பொறுத்தவரை கடலூர் மாநில செயற்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தியது. இதற்கிடையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தனர்.
ஜெயக்குமார் பேட்டி
பின்னர் பேசிய ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என்று பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களின் நிலைப்பாடு குறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் எனக் கூறினார். ஆனால் பாஜக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை அவ்வளவு எளிதில் விட்டுவிட விரும்பவில்லை.
ஏற்கனவே 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம், எம்.எல்.ஏ சி.சரஸ்வதி, என்.பி.பழனிசாமி, எஸ்.ஏ.சிவசுப்ரமணியம், எஸ்.எம்.செந்தில், சிவகாமி மகேஸ்வரன், பொன்.ராஜேஷ் குமார், ஜி.விவேகானந்தன், விஸ்வா பாலாஜி, என்.விநாயகமூர்த்தி, டி.தங்கராஜ், ஆற்றல் அசோக் குமார், புனிதம் ஐயப்பன், டி.ரஞ்சித் ஆகியோர் அடங்குவர்.
சீக்ரெட் சர்வே
இந்நிலையில் பாஜக மற்றொரு விஷயத்தை மேற்கொண்டதாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 15 பேர் கொண்ட சீக்ரெட் குழுவை களமிறக்கி ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களின் பல்ஸ் என்னவென்று கண்டறிய சர்வே ஒன்றை நடத்தியுள்ளதாம். இவர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
டெல்லி பறக்கும் ரிப்போர்ட்
தொகுதியில் கள நிலவரம் எப்படி உள்ளது? ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள செல்வாக்கு? ஆளுங்கட்சி மீது திருப்தியா? அதிருப்தியா? பாஜகவின் மீதான நிலைப்பாடு? எனப் பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனர். இதனை இன்றைய தினம் (ஜனவரி 22) டெல்லி மேலிடத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பாஜக தலைமை முடிவு எடுக்கும்.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் எனத் தெரிகிறது. முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. அதன்பிறகு ஏ.பி.முருகானந்தம் பெயர் அடிபட்டது. இந்த சூழலில் தான் சீக்ரெட் சர்வே டெல்லி பறந்துள்ளது.
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.