ஆப்நகரம்

''ஏழை மக்கள் பசியாற அம்மாவால் கொண்டு வரப்பட்ட திட்டம்''

மதுரவாயல் அம்மா உணவகம் தாக்கப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 4 May 2021, 4:33 pm
அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியது கண்டித்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil அம்மா உணவகம் உடைப்பு


இது தொடர்பாக எல்.முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' அம்மா உணவகம் ஏழை மக்கள் பசியுடன் வாடக்கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய முத்தாய்ப்பு திட்டமாக கொண்டுவரப்பட்டது.

மிக மிக குறைவான விலையில் ஏழை மக்களுக்கு தொழிலாளர்களுக்கு உணவு அளித்து அம்மா உணவகம் சேவை செய்து வருவதை அனைவரும் அறிந்ததே. சென்னை மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் பெயர் பலகைகள், விலைப்பட்டியல் போன்றவற்றை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கி வீடியோ காட்சிகளை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி நடைபெறக் கூடாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலினுக்கு செக் வைக்கும் பாஜக: தமிழகத்தில் பலிக்குமா திட்டம்!

அம்மா உணவகம் பெயர் பலகை அகற்றப்பட்ட விவகாரத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நவசுந்தர், சுரேந்திரன் உள்ளிட்ட மூவர் மீது 3 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக சேதப்படுத்தபட்ட அம்மா உணவகத்தில் பெயர் பலகை மீண்டும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி