ஆப்நகரம்

சிறையில் உள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திப்பது தவறு: தமிழிசை கண்டனம்

சிறையில் உள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவது தவறான செயல் என்று, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TNN 11 Jun 2017, 1:20 pm
சிறையில் உள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவது தவறான செயல் என்று, தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil bjp tamilnadu leader tamilisai condems admk ministers for meeting sasikala
சிறையில் உள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திப்பது தவறு: தமிழிசை கண்டனம்


அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு காரணமாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, கட்சி பிரதிநிதிகள், தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் எனப் பலரும் அவ்வப்போது நேரில் சென்று, சந்தித்துப் பேசி வருகின்றனர்.

இதற்கு, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சிறையில் உள்ள சசிகலாவுக்கும், தமிழக அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை கட்சி ரீதியாக யார் வேண்டுமானாலும் சந்தித்துப் பேசலாம். ஆனால், ஆட்சி ரீதியாக, அதுவும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று சந்திப்பது ஏற்புடையதல்ல. இது தவறான செயல். இதனை அனுமதிக்கவும் கூடாது,’’ எனக் குறிப்பிட்டார்.

Tamkilnadu: BJP state leader Tamilisai condems ADMK ministers for meeting Sasikala.

அடுத்த செய்தி