ஆப்நகரம்

'ராமர் தமிழகத்தில் எடுபட மாட்டார் என்பதால் முருகனின் வேலை எடுத்துள்ளனர்' - திருமா

பெரியார் கொள்கைகளை போற்றிப் பாதுகாக்க திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வருகிறது. இனி விடுதலை சிறுத்தைகளும் இணைந்து மூன்று குழல் துப்பாக்கியாகச் செயல்படும் என சென்னையில் திருமாவளவன் பேச்சு

Samayam Tamil 24 Dec 2020, 8:03 pm
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பில் சமுக நீதிக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட கி. வீரமணியி கையால் திருமாவளவன் விருதை பெற்றுக்கொண்டார்.
Samayam Tamil tirumavalavan


அப்போது பேசிய திருமாவளவன், '' எனது பொதுவாழ்வை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருமாவளவனை தனிமைப்படுத்தவேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை அரசியலில் இருந்து ஒதுக்கவேண்டும் என செயல்படும் கட்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக திருமாவளவனை தனிமை படுத்தமுடியாது, அரணாய் திராவிடர் கழகம் இருக்கும் என உணர்த்தும் வகையில் சரியான தருணத்தில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பெரியார் கொள்கைகளை போற்றிப் பாதுகாக்க திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வருகிறது. இனி விடுதலை சிறுத்தைகளும் இணைந்து மூன்று குழல் துப்பாக்கியாகச் செயல்படும்.

நான் சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து பெரியார் திடலில் பேச முதன் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அந்த முதல் பேச்சே விடுதலை இதழில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது. திராவிடர் கழகம் இல்லை என்றால் சமூக நீதி என்றோ ஓரங்கட்டப்பட்டிருக்கும். சாதி மத வெறியர்களால் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்து நடிகர்களை இறக்கி விட்டு காலூன்றப் பார்க்கிறார்கள். அதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். கலைஞர், ஜெயலலிதா இல்லாத காரணத்தை வைத்து தமிழகத்திற்குள் வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.க உடன் சேர்ந்து முறியடிப்போம்.

முதல்வருக்கு திடீரென காவடி தூக்கும் அண்ணாமலை ஐபிஎஸ்!

இந்திய அளவில் கொள்கை சார்ந்து சமூக நீதிக்காகப் போராடும் வலிமையான இயக்கம் திராவிடர் கழகம். சனாதனவாதிகளுக்கு சமூக நீதி அச்சுறுத்தலாக இருக்கிறது. வி.சி.க தேர்தல் அரசியலில் இருந்து சமூக நீதி பேசுவதால் வாக்கு வங்கியை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. சமூக நீதியை பாதுகாக்க தேர்தல் அரசியலை விட்டு ஒதுங்கவும் தயாராக இருக்கிறது. விடுதலை சிறுத்தைகளுக்கு திராவிடர் கழகம் ஒரு பயிற்சி பாசறை. அவர்கள் சொன்னால் தேர்தலை புறக்கணித்துவிட்டு சமூக நீதியை பாதுகாப்பதற்காக போராடத் தயார். சாதி மத வெறியர்களால் அவ்வளவு ஆபத்தான சூழலில் இருக்கிறோம். திராவிடர் கழகத்துடன் இணைந்து சனாதனத்தை வேரறுப்போம் சனநாயகத்தை பாதுகாப்போம்.

ஆன்மீகமும் அரசியலும் எப்படி ஒருமுகமாக இருக்க முடியும்? ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்துகிறார்கள். ராமர் தமிழகத்தில் எடுபட மாட்டார் எனத் தெரிந்து தமிழர் கடவுளான முருகனின் வேலை கையில் எடுத்துள்ளார்கள். சனாதனவாதிகளை விரட்டுவதை விட வேறு வேலை எங்களுக்கு இல்லை '' என இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

அடுத்த செய்தி