தஞ்சாவூர்: தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் 3 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் மாவட்ட கட்சி அலுவலகம் கட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூமி பூஜையில் கலந்துக் கொள்ளச் சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகளின் நலன் கருதி பா.ஜ.க 3 தொகுதிகளில் நடக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது என கூறியுள்ளார்.
Reached Thanjavur to attend the boomi pooja of Thanjavur district office construction pic.twitter.com/b4UBIBaoVb — Tamilisai Soundrajan (@drtamilisaibjp) October 27, 2016 மேலும், தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களின் பட்டியல் இன்று அலல்து நாளை வெளியிடப்படும் என்றும் கூறினார். காவிரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கூறி காவிரியில் நீர் திறந்துவிட செய்ய திருநாவுக்கரசர் வலியுறுத்த வேண்டும் என்று தமிழிசை கூறியுள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் பொறுப்பாளர்களாக உள்ள அமைச்சர்களை அதிகாரிகள் கூர்ந்து கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் மாவட்ட கட்சி அலுவலகம் கட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூமி பூஜையில் கலந்துக் கொள்ளச் சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், விவசாயிகளின் நலன் கருதி பா.ஜ.க 3 தொகுதிகளில் நடக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது என கூறியுள்ளார்.
Reached Thanjavur to attend the boomi pooja of Thanjavur district office construction pic.twitter.com/b4UBIBaoVb — Tamilisai Soundrajan (@drtamilisaibjp) October 27, 2016 மேலும், தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களின் பட்டியல் இன்று அலல்து நாளை வெளியிடப்படும் என்றும் கூறினார். காவிரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கூறி காவிரியில் நீர் திறந்துவிட செய்ய திருநாவுக்கரசர் வலியுறுத்த வேண்டும் என்று தமிழிசை கூறியுள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் பொறுப்பாளர்களாக உள்ள அமைச்சர்களை அதிகாரிகள் கூர்ந்து கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.