ஆப்நகரம்

ஓயாத தமிழக பாஜக; தமிழிசை பயணித்த ஏர்லைன்ஸ் மீது விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் புகார்!

இண்டிகோ ஏர்லைன்ஸ் மீது விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் புகார் அளித்துள்ளார்.

Times Now 4 Sep 2018, 6:12 pm
சென்னை: இண்டிகோ ஏர்லைன்ஸ் மீது விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil Tamilisai


இதுதொடர்பாக அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், செப்டம்பர் 3, 2018ல் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த 6E 7185 இண்டிகோ விமானத்தில் நடந்தவற்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதில் பயணித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனைக் கண்ட சக பயணியான லூயிஸ் சோபியா, ‘பாசிச பாஜக ஒழிக’ என்று முழக்கமிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு விமானத்திற்குள் நடைபெற்றுள்ளது. இருப்பினும் எங்கள் தலைவர் விமானத்தில் இருந்து கீழிறங்கும் வரை மிகவும் பொறுமை காத்தார். பின்னர் அப்பெண்ணிடம் விமானத்திற்குள் நீங்கள் நடந்து கொண்ட செயல் சரியா என்று தமிழிசை கேள்வி எழுப்பினார். தனது செயலுக்கு வருந்தி, மன்னிப்பு கேட்குமாறு தமிழிசை மற்றும் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் அப்பெண் ஏற்கவில்லை. முன்னதாக விமானத்தில் ஏறியவுடன், எங்கள் தலைவரை பார்த்தவுடனே, சோபியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் திட்டமிட்டு எங்கள் கட்சியின் புகழுக்கு களங்கும் விளைவிக்க முயற்சி நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இந்நிகழ்வு அரசியல் ரீதியாக தூண்டிவிடப்பட்டதாகவே கருதுகிறேன். சோபியாவை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது. ஏனெனில் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இண்டிகோ ஏர்லைன்ஸிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும், மன்னிப்பு கோர வலியுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று வினோஜ் பி செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

BJP youth wing president writes to civil aviation minister to take action against Indigo airlines.

அடுத்த செய்தி