ஆப்நகரம்

விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் வேண்டாம்; ஈரோட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.

Samayam Tamil 8 Mar 2019, 1:58 pm
திருப்பூர் மாவட்டம் நியூ புகளூரிலிருத்து, சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் வரை 800 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 14 மாவட்ட விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil black flag protest conducted against high voltage towers in farmland near erode
விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் வேண்டாம்; ஈரோட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!


ஆனால் இவை விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதால் விளைநிலங்கள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் சாலையோரங்களில் புதைவட கேபிளாக கொண்டு செல்ல வலியுறுத்தி, விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் உயர் மின் கோபுரங்கள் செல்லும் பகுதிகளான மூலக்கரை, முத்தாயிபாளையம், முதலிகவுண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாயிகள், தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

மூலக்கரை பகுதியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை அரசு நிறுத்தும் வரை தங்களது போராட்டங்கள் பல்வேறு வகைகளில் தொடரும் என்று கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி