ஆப்நகரம்

அபாய பகுதியாக மாறும் போடிமெட்டு சாலை, பயணிகள் அச்சம்.!

தேனி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில், பெய்து தொடர் மழையால், போடிமெட்டு மலைப்பாதையில் உள்ள சாலைகளின் பல இடங்களில் தடுப்புச் சுவர் சேதமடைந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

TNN 20 Sep 2017, 5:15 pm
தேனி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில், பெய்து தொடர் மழையால், போடிமெட்டு மலைப்பாதையில் உள்ள சாலைகளின் பல இடங்களில் தடுப்புச் சுவர் சேதமடைந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளத
Samayam Tamil bodimettu mountain road becomes dangerous because of rain
அபாய பகுதியாக மாறும் போடிமெட்டு சாலை, பயணிகள் அச்சம்.!


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள் என நீர்நிலை ஆதாரங்கள் நிரம்பியுள்ளன.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால், , போடிமெட்டு மலைப்பாதையில் உள்ள சாலைகளின் பல இடங்களிலும், பாறைகள் உருண்டும், மரங்கள் வேரோடு சாய்ந்தும் கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை தூர்வாரி சாலையை சீராமைக்கும் பணிகள் மந்தமாக நடப்பதாக வாகன ஓட்டிகள் வேதனையடைந்துள்ளனர். போடி சுற்று பகுதியின் வழியாக தோட்ட வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகள், உயிர் பயத்துடன் பயணிப்பதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

Bodimettu mountain road becomes dangerous because of rain.

அடுத்த செய்தி