ஆப்நகரம்

அசாமில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

அசாமில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை வீரர் ராஜேஷ் உடல், அவரது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Samayam Tamil 20 May 2019, 1:29 pm
அசாமில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை வீரர் ராஜேஷ் உடல், அவரது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Samayam Tamil அசாமில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!
அசாமில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்!


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் ராஜேஷ் (38), அசாம் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி இரவு பணியில் இருந்த ராஜேஷ் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து ராஜேஷின் உடல், கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் பாரதி நகருக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, இன்று காலை பாரதி நகர் சுடுகாட்டில் ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த ராணுவ வீரர் ராஜேஷூக்கு, புவனேஸ்வரி என்ற மனைவியும் ஜனனி வயது(6), சாய் கிருஷ்ணன் வயது (2) என இரு குழந்தைகளும் உள்ளனர். ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி