ஆப்நகரம்

​ திருப்போரூரில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

திருப்போரூர் தனியார் மருந்து கம்பெனியில் பாய்லர் வெடித்து சிதறியதில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

TNN 3 Oct 2016, 6:35 pm
காஞ்சிபுரம் : திருப்போரூர் தனியார் மருந்து கம்பெனியில் பாய்லர் வெடித்து சிதறியதில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
Samayam Tamil boiler explosion tirupporur four person died
​ திருப்போரூரில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு


காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே ஆத்தூர் சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் மருந்து கம்பெனியில் கடந்த மாதம் 29ம் தேதி, திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. இதில் தொழிலாளர்கள் ஆலத்தூரை சேர்ந்த முருகன் (34) சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த சதீஷ் (38), சிதம்பரத்தை சேர்ந்த அருள் (47), செங்கல்பட்டை சேர்ந்த கிருஷ்ணபிரசாத் (37) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று சதீஷ், அருள் ஆகியோர் இறந்தனர். இன்று காலை கிருஷ்ணபிரசாத் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.

இதனிடையே பாய்லர் வெடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த தொழிற்சாலையில் வேலை செய்பவர்களிடம் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி