ஆப்நகரம்

சினிமா பாணியில் வெடிகுண்டு, அரிவாளால் அதிமுக பிரமுகர் பட்டப்பகலில் கொலை

நாகை மாவட்டம் சீர்காழியில் பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் ரமேஷ் பாபு என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

Samayam Tamil 24 Jul 2018, 6:08 pm
நாகை மாவட்டம் சீர்காழியில் பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் ரமேஷ் பாபு என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
Samayam Tamil ramesh babu


மணல் பாபு என செல்லமாக அழைக்கப்படும் ரமேஷ் பாபு மணல், நிலம், அரசியல் என பலவற்றில் கொடிகட்டி பறந்தார். அவரை அப்பகுதியில் தெரியாத ஆட்களே இல்லை என்ற அளவிக்கு இருந்தார்.

இந்நிலையில் சொகுசு காரில் சென்ற ரமேஷை காலை 11.30 மணியளவில் சீர்காழி கடை வீதியில் வெடிகுண்டு வீசி, அரிவாளால் சரவாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

நாட்டு வெடிகுண்டு அவரின் கார் மீது வீசப்பட்டது. இதனால் தன்னை கொல்ல கும்பல் வந்ததை உணர்ந்த ரமேஷ் தன் காரை விட்டு இறங்கு ஓட நினைத்தார்.

ஆனால் அவரை பின் தொடர்ந்த கும்பல் அரிவாளால் அவரின் தலை, கழுத்து, முகம் என சரமாரியாக வெட்டினர். இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரமேஷ் பாபு துடிதுடிக்க உயிரிழந்தார்.

அடுத்த செய்தி