ஆப்நகரம்

Jayalalithaa: ரஜினி, ஜெயலலிதா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை பேயாஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த், ஜெயலலிதா வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Mar 2019, 9:28 am
சென்னை பேயாஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த், ஜெயலலிதா வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil jaya rajini


சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை சுமார் 6 மணியளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீட்டில் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கப்போகிறது என்று கூறி வைத்து விட்டார்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார், ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளில் சென்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால், எந்தவித வெடிபொருளும் சிக்கவில்லை. இது ஒரு பக்கம் நடக்க, மறுபுறம் மிரட்டல் விடுத்த போன்கால் பற்றி போலீசார் விசாரித்து வந்தனர்.

விசாரணையில், மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண் கோவையிலிருந்து வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போன் நம்பரை வைத்து விசாரிக்கையில், கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவரது பெயர் முகமது அலி என்பதும், மனஅழுத்தம் காரணமாக ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்ததுள்ளது. இந்த சம்பவத்தால் போயஸ் கார்டனில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

அடுத்த செய்தி