ஆப்நகரம்

அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... நிபுணர்கள் ஆய்வு

அண்ணா அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 28 Nov 2019, 9:19 pm
திமுகவின் தலைமை அலுவலகமாகவும், கலைஞர் தொலைக்காட்சியின் அலுவலகமாகவும் விளங்கும் அண்ணா அறிவாலயத்துக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil anna arivalayam


சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும், நிர்வாகிகளும் வந்து செல்வது வழக்கும். மேலும் கலைஞர் தொலைக்காட்சியின் குழும அலுவலகமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் தொலைபேசி வழியாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.



இதனால், அறிவாலய வட்டாரத்தினர் பதற்றமடைந்துள்ளனர். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை அடுத்து தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் கோவிந்தராஜூ அறிவாலயம் சென்று ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள் விரைந்து அழைத்துவரப்பட்டு சோதனைப் பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர்.

இது உண்மையான மிரட்டல் தானா? அல்லது யாரேனும் வெற்று விளம்பரங்களுக்காக இப்படி செய்கின்றனரா? என்ற கேள்விகள் எழுகின்றன. மேலும் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத இந்த நேரத்தில் இப்படி ஒரு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் கிஷோருடன் கைகோர்க்கும் மு.க ஸ்டாலின்...

இதேபோல, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக நேற்று இரவு காவல் துறைக்கு மர்மநபர்களிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அடிக்கடி இதுபோல விளம்பரங்களுக்காக யாராவது ஒரு அடையாளம் தெரியாத நபர் இப்படி செய்வதுண்டு என்று தெரிவித்தது காவல்துறை. ஆனபோதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு சோதனைகள் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி