ஆப்நகரம்

சுஜித் இறந்த ஆழ்துளைக் கிணறு கான்கிரீட் கலவை போட்டு மூடப்பட்டது!

சிறுவன் சுஜித் வில்சன் விழுந்து உயிரிழந்த ஆழ்துளைக் கிணறு சிமெண்ட் போட்டு மூடப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Oct 2019, 10:44 am
எப்படியும் சுஜித்தை மீட்டு விடுவார்கள். உயிருடன் மீண்டு வந்துவிடுவான் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களின் இதயத்தில் இடி விழுந்துவிட்டது போன்ற உணர்வு. இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.
Samayam Tamil Surjith Save


கடந்த 5 நாட்களாக 82 மணி நேரமாக நடைபெற்று வந்த மீட்பு பணிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறுவன் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

மீளாத் துயரில் ஆழ்த்திய சுஜித்; கிறிஸ்துவ முறைப்படி நல்லடக்கம்!

இதையடுத்து மீட்கும் பணியில் நடைபெற்று, சுஜித் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பாத்திமாநல்லூர் கல்லறைத் தோட்டத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் கண்ணீரோடு வழி அனுப்பி வைத்தனர்.

குழந்தை சுஜித் உடலுக்கு இறுதிச் சடங்கு - ஏராளமானோர் நேரில் அஞ்சலி!

கல்லறைத் தோட்டத்திற்கு சென்றவுடன் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கிறிஸ்துவ முறைப்படி சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அங்கும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில் சுஜித் விழுந்து உயிரிழந்த ஆழ்துளைக் கிணறு சிமெண்ட் கலவையால் மூடப்பட்டுள்ளது.

இறந்த நிலையில் சுஜித் உடல் மீட்பு - மருத்துவமனையில் பிரேத பரிசோதனை!

அடுத்த செய்தி