ஆப்நகரம்

எடப்பாடிக்கு டெல்லியில் காத்திருந்த ஷாக்: எஸ் சார் சொன்ன ஓபிஎஸ்!

டெல்லி பயணம் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Jul 2021, 9:31 am
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஒருவழியாக டெல்லி சென்று மோடியையும், அமித் ஷாவையும் சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
Samayam Tamil ops eps


எதிரும் புதிருமாகத் தான் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் இருக்கின்றனர் என்பது அவர்களது பயணத் திட்டத்திலேயே தெரிந்தது. பன்னீர் செல்வம் முன்கூட்டியே டெல்லி சென்றார், அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்றார். திரும்பி வரும் போதும் சேர்ந்துவரவில்லை.
சசிகலாவுக்கு மதுசூதனன் கொடுத்த கிஃப்ட்? இனி ஒரே அதிரடி தான்!
நேற்று முன் தினம் மோடியோடு இருவரும் பேச சென்றனர். இருவரும் பிரதமருடன் அமர்ந்து பேசியது தொடர்பான புகைப்படம் வெளியான போதும், அதற்கு முன்னதாக இருவரிடமும் தனித்தனியாக மோடி பேசியுள்ளார் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். முதலில் ஓபிஎஸ்ஸை அழைத்து பத்து நிமிடங்கள் பேசியுள்ள மோடி அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் ஐந்து நிமிடங்கள் பேசியுள்ளார். அதன் பின் இருவரையும் ஒன்றாக அழைத்தும் பேசியுள்ளார்.

மோடி ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். அது 2024 மக்களவைத் தேர்தல். இரு முறை ஆட்சியைப் பிடித்த மோடிக்கு அடுத்த முறை சற்று சவாலாக இருக்கும் என நினைக்கிறார். தேசிய அளவில் எதிர்கட்சிகள் மோடிக்கு எதிராக ஒன்றிணைய தொடங்கிவிட்டன. இந்த சூழலில் மக்களவைத் தேர்தலை மட்டுமே பாஜகவினர் குறிவைத்துள்ளனர்.
9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன தகவல்!
மோடி, அமித் ஷா இருவர் தனித்தனியாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடத்திய ஆலோசனையில் இதையே வலியுறுத்தியுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு பலத்த அடி விழுந்தது. இந்த முறை அப்படி நடந்துவிடக்கூடாது என்பதால் கட்சியை பலமாக்கும் வேலையைப் பாருங்கள் என இருவருமே உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இனியும் பிரிந்து நின்று கட்சியை பலவீனமாக்கி வெற்றியை பறிகொடுத்துவிடக்கூடாது என்பதை மோடி, அமித் ஷா இருவரும் கறாராக சொல்லியுள்ளனர். சசிகலாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து இருவரும் பேசியவுடன் ‘எஸ் சார்’என சம்மதம் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். ‘எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க’ என அவகாசம் கேட்டு திரும்பியுள்ளார் இபிஎஸ்.
டிடிவி தினகரன் ரிட்டர்ன்ஸ்: அதிமுக - அமமுக இணையுமா?
கட்சிக்குள்ளே கலகம் வெடித்து வரும் நிலையில் டெல்லியும் தமக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த இபிஎஸ் தனது சகாக்களிடம் இது குறித்து பேசி எதற்கும் தயாராக இருங்கள் என சொல்லிவருவதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி