ஆப்நகரம்

பெட்டி, பெட்டியாக தோட்டாக்கள், வெடிகுண்டுகள்; தங்கச்சிமடத்தில் குழிதோண்டும் போது அதிர்ச்சி!

குழிதோண்டும் போது பெட்டி, பெட்டியாக தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Jun 2018, 9:11 pm
ராமேஸ்வரம்: குழிதோண்டும் போது பெட்டி, பெட்டியாக தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Bullet Boxes


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்து உள்ள பகுதி தங்கச்சிமடம். இதன் அருகே அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன். இவரது வீட்டில் செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டப்பட்டது. அப்போது சில பெட்டிகள் தென்பட்டன.

தொடர்ந்து தோண்டிய போது, ஏராளமான பெட்டிகள் சிக்கின. சந்தேகமடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், அவற்றை ஆய்வு செய்தனர்.

அதில் எல்.எம்.ஜி ரக தோட்டாக்கள், ஏ.கே. 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள், நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. மொத்தம் 23 பெட்டிகள் தோண்டி எடுக்கப்பட்டன. இதற்காக 5 அடிக்கும் மேலாக குழி தோண்டப்பட்டது.

இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது, அவர்களுக்கு உதவ தோட்டாக்கள் தங்கச்சிமடம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதற்காக இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தோட்டாக்கள் அனைத்தும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Boxes of Bullets and guns are find in Thangachimadam.

அடுத்த செய்தி