ஆப்நகரம்

தவறான உறவுகளால் பிறக்கும் குழந்தைகளை விற்கும் கும்பல்!

தவறான உறவுகளால் பிறக்கும் குழந்தைகளை விற்கும் கும்பல்!

TOI Contributor 8 Nov 2016, 4:50 pm
தவறான உறவால் பிறக்கும் குழந்தைகளை சொற்ப விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கும் கும்பலால் நாகர் கோவில் தம்பதிக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
Samayam Tamil boy baby rescued from nellai couple 16 arrested
தவறான உறவுகளால் பிறக்கும் குழந்தைகளை விற்கும் கும்பல்!

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த அருணாசலம், தேவிகா தம்பதியினருக்கு குழந்தைப்பேறு இல்லாததால் குழந்தையை தத்தெடுக்க விரும்பி, நயினார் என்பவரிடம் 1 மாத ஆண் குழந்தையை 2.5 லட்ச ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனால் தத்தெடுத்ததற்கான ஆவணங்கள் எதையும் நயினார் தராததால் அருணாசலம் காவல்துறையில் புகார் அளித்தார். ஆலங்குளம் காவல்துறையினர் நயினாரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

ஆலங்குளத்தை சேர்ந்த திருமண தரகர் ஆறுமுகம், சிவநாடானூரை சேர்ந்த தங்கபாண்டியன் மற்றும் தாழையூத்தை சேர்ந்த பொன்னுத்தாய் இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்கு கடையநல்லூரை சேர்ந்த எஸ்தர் என்பவர் உதவி புரிந்துள்ளார். அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பொன்னுத்தாய் தவறான உறவுகளில் பிறக்கும் குழந்தைகளை கொன்றுவிடுவதாக கூறி தூக்கி வந்து ஆலங்குளத்தில் விற்பனை மையம் வைத்து விற்பனை செய்துள்ளனர்.

எஸ்தர் என்பவர் தமிழகம் முழுவதும் குழந்தை வேண்டுமென கேட்பவர்களை ஆலங்களுத்திற்கு அழைத்து வர உதவி செய்துள்ளார். ஆண் குழந்தைகளை 2.5 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 1.5 லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நாகர் கோவிலில் உள்ள அருணாச்சலத்திடம் ஆண் குழந்தையை கொடுத்து ஆவணங்கள் தரவில்லை என்று அவர் காவல்துறையில் புகார் கொடுத்ததால் இந்த கும்பலை தற்போது கைது செய்துள்ளனர்.

இதுவரை இந்த கும்பலை சேர்ந்த 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் பார்த்துக்கொள்ளப்படுகின்றனர். இந்த கும்பலிடம் குழந்தைகள் வாங்கிய பலரும் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி