ஆப்நகரம்

குட்டி சைக்கிளில் சிறுவன்.. தட்டி தூக்கிய எம்எல்ஏ வாகனம்!

குட்டி சைக்கிளில் வந்த சிறுவன் எம்எல்ஏ வாகனம் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், மக்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 24 Nov 2022, 10:18 pm
தென்காசி சட்ட மன்ற தொகுதி உறுப்பினராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழனி நாடார் இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான டிராக்டர் அதேப் பகுதி கீழ சுரண்டை அருகே உள்ள குளங்களில் இருந்து மணல் எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
Samayam Tamil palani nadar


கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவில் வந்தபோது, தனது குட்டி காருடன் விளையாடிக் கொண்டு இருந்த 4 வயது சிறுவன் ராஜமுகன் திடீரென டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடி.. துடித்து உயிரிழந்தான்.

இதை பார்த்ததும் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பலியான சிறுவனின் உடலை மீட்டு தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

டெய்சி, சூர்யா சிவா.. 3 மணி நேரத்தில் பஞ்சாயத்து கிளியர்!
இதன் பின்னர், டிராக்டர் டிரைவர் பாக்கியசாமியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை ராஜதுரை மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவனின் தந்தை ராஜதுரை மற்றும் உறவினர்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தனக்கு சொந்தமான டிராக்டர் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து விளக்கி மனவேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

ஒரு வாரம் பள்ளி விடுமுறை; மாணவர்களிடையே பரபரப்பு!
மேலும் தன்னுடைய டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதாக தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் குறிப்பிட்டு உள்ளார்.


இதற்கிடையே தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் அதிகமான அளவில் சரல் மண் வெட்டி எடுத்து செல்லப்படுவதாகவும், தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் பழனி நாடார் மட்டும் இல்லாமல் பலரும் இது போன்று மணல் எடுத்து செல்லும்போது வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு சொந்தமான டிராக்டர் மோதிய விபத்தில் வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி