ஆப்நகரம்

போலீஸ் துரத்தியதால் கூவத்தில் குதித்த இளைஞர் மரணம்

கோஷ்டி தகராறில் தொடர்புடைய நபரை போலீசார் துரத்திச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த இளைஞர் கூவத்தில் விழுந்து மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 14 Oct 2016, 3:44 pm
சென்னை: கோஷ்டி தகராறில் தொடர்புடைய நபரை போலீசார் துரத்திச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த இளைஞர் கூவத்தில் விழுந்து மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil boy drowns in cooum after being chased by chennai police
போலீஸ் துரத்தியதால் கூவத்தில் குதித்த இளைஞர் மரணம்


கண்ணகிநகரைச் சேர்ந்த முகேஷ்(17), கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க புதுப்பேட்டை சென்று வீடு திரும்பவில்லை. முகேஷின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இறுதிச்சடங்கில் இளைஞர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் முகேஷுக்கும் தொடர்புடையதால், சென்னை எழும்பூர் போலீசார் அவரை தேடி வந்துள்ளனர்.

இதனிடையே, 2 நாட்களாக போலீஸ் கண்ணில் படமால் பதுங்கியிருந்து நேற்று காலை மற்றும் இரு நபர்களுடன் சேர்ந்து முகேஷும் நடமாட துவங்கியுள்ளார். அப்போது அவர்களை பார்த்த போலீசார் துரத்தியதையடுத்து மூவரும் கூவத்தில் குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளனர். இதில் மற்ற இருவரும் தப்பிய நிலையில், முகேஷ் கூவம் ஆற்றில் மூழ்கி பலியானார்.

இது குறித்து முகேஷின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முகேஷின் உடல் கூவம் நதியில் இருந்து மீட்கப்பட்டது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் திருட்டு வழக்கில் தொடர்புடையதாகக் கூறி மயிலாப்பூர் போலீசார் முகேஷை பிடித்து வைத்துள்ளனர். அப்போது, 4 போலீசார் முகேஷிடம் விசாரணைக்காக அடித்தபோது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் முகேஷுக்கு காது கேட்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி