ஆப்நகரம்

கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி !

கிரிக்கெட் பந்தை எடுக்க முயற்சித்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சென்னை கொடுங்கையூரில் நடந்துள்ளது.

Samayam Tamil 2 Apr 2019, 11:13 am
கிரிக்கெட் பந்தை எடுக்க முயற்சித்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சென்னை கொடுங்கையூரில் நடந்துள்ளது.
Samayam Tamil Current-shock


சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற மாணவர் 8 ஆம் வகுப்புப் படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார்.
அப்படி விளையாடியபோது கிரிகெட்டு பந்து காணாமல்போனது. மைதானத்திற்கு அருகில் கட்டடவேலை நடந்து வருகிறது. ஒருவேளை பந்து அங்கு விழுந்திருக்கலாம் என்று, ஹரிஹரன் சென்று பார்துள்ளான். கட்டத்தில் உள்ள வலையில் சிக்கிக்கொண்டுருக்கும் பந்தை எடுக்க மின்சார கம்பத்தின் மீது ஏறினான்.

பந்தை எடுக்க முயற்சித்தபோது தவறி கீழே விழுந்தான். கிழே விழுந்து அடிபடாமல் இருக்க அருகில் சென்ற மின்சார கம்பியை பிடித்தபோது, மின்சாரம் தாக்கி ஹரிஹரன் தூக்கி எறியப்பட்டான். மின்சாரம் தாக்கியதால் தீக்காயங்கள் ஏற்பட்டது. அங்கிருந்தவர்களும், ஹரிஹரனின் நண்பர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் மரணமடைந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி