ஆப்நகரம்

பேருந்து மோதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

: வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே சாலையில் விளையாடிகொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

TOI Contributor 22 Apr 2017, 2:07 am
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே சாலையில் விளையாடிகொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
Samayam Tamil boy fatally knocked down by tn govt bus
பேருந்து மோதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலை என்பவரது நான்கு வயது மகன் பெருமாள். ஜோசியம் செய்யும் தொழில் செய்து வரும் கலை மற்றும் அவரது உறவினர்கள் கடந்த வாரம் வேலூர் மாவட்டம் ஆலங்காயம் வந்துள்ளனர். அங்குள்ள அரசு மருத்துவமனை அருகே உள்ள காலியிடத்தில் குடில் அமைத்து அவர்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று தொழில் நிமித்தமாக ஆலங்காயம் அருகே உள்ள ஊர்களுக்கு கலை மற்றும் அவரது உறவினர்கள் சென்றுள்ளனர். அதன்பின்னர், சிறுவன் பெருமாள், அவனது சகோதரர்கள் மற்றும் கலையின் உறவினர்களது குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த அரசுபேருந்து, விளையாடிகொண்டிருந்த நான்கு வயது சிறுவன் பெருமாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் சிறுவன் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சிறுவன் மீது மோதி விடாமல் இருக்கும் பொருட்டு, தொடர்ந்து ஹாரன் அடித்து வந்ததுடன், பிரேக்கும் அடித்துள்ளார் பேருந்து ஓட்டுனர். எனினும், பேருந்து நிற்காமல் சிறுவன் மீது மோதியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்காயம் போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு கேட்கும் திறன் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவனது பெற்றோர், விபத்து குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், பேருந்து ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Boy fatally knocked down by TN govt bus

அடுத்த செய்தி