ஆப்நகரம்

ஒரே ஒரு கேள்வி தான்.. 14-வது மாடிக்கு லிப்டில் போய் சிறுவன் செய்த காரியம்.. கதறிய டாக்டர் பெற்றோர்

படிக்க வைத்து, உணவு கொடுத்து, என்னென்ன தேவையோ அதை பார்த்து பார்த்து செய்யும் பெற்றோருக்கு குழந்தைகளை கண்டிக்க கூட உரிமை இல்லையா? திருவள்ளூரில் விளையாட்டுத்தனமாக இருந்த மகனை சாதாரணமாக கண்டித்ததால் அவர் 14-வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 25 May 2023, 12:43 pm
திருவள்ளூர்: தங்கையை ஏன் வீட்டுக்குள் வைத்து பூட்டினாய்? என சாதாரணமாக தாயார் கண்டித்து பேசியதற்காக 14-வது மாடிக்கு ஓடிச்சென்ற சிறுவன் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதற வைக்கின்றன.
Samayam Tamil jump building


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதியர் பாலாஜி - மலர். இவர்களுக்கு லோக்நாத் (15) என்ற மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே, 10-ம் வகுப்பை முடித்த லோக்நாத்தை ஐஐடி நிறுவனத்தில் படிக்க வைக்க அவரது பெற்றோர் விரும்பினர்.

இதற்காக, 11-ம் வகுப்பிலேயே ஐஐடி பயிற்சி தரக்கூடிய சென்னையில் உள்ள ஒரு பள்ளியை அவர்கள் தேர்வு செய்தனர். அந்தப் பள்ளியில் மகன் லோக்நாத்தை சேர்ப்பதற்காக டாக்டர் தம்பதியர், திருவண்ணாமலையில் இருந்து அம்பத்தூர் அருகே உள்ள பருத்திப்பட்டு என்ற பகுதிக்கு அண்மையில் குடிப்பெயர்ந்தனர். அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்தனர்.

டாக்டர் தம்பதியர் இருவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே, லோக்நாத்துக்கு கால்பந்து விளையாட்டில் அதீத ஆர்வம் இருந்தது. எப்போது பார்த்தாலும் அங்குள்ள சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி கொண்டே இருப்பாராம். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை டாக்டர் தம்பதியர் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது லோக்நாத்திடம், "தங்கை வீட்டில் இருக்கிறாள். நீயும் அவளுடன் வீட்டிலேயே இரு" எனக் கூறி சென்றிருக்கின்றனர்.
"சீமான் மாமா.. எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது".. உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி
லோக்நாத்தும் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இதனிடையே, மதியம் அவரது நண்பர்கள் கால்பந்து விளையாடுவதை பார்த்த லோக்நாத்துக்கு தானும் விளையாட வேண்டும் என்ற ஆசை வந்தது. இதையடுத்து, தங்கையை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு லோக்நாத் விளையாடச் சென்றுவிட்டார். இந்நிலையில், மாலையில் வீடு திரும்பிய தாயார் மலர், வீட்டுக்குள் குழந்தை பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் லோக்நாத்தை அழைத்து, "தங்கையை வீட்டுக்குள் தனியாக பூட்டிச் சென்றுள்ளாயே.. ஏதாவது விபரீதம் நடந்தால் என்ன செய்வாய்?" எனத் திட்டி இருக்கிறார்.

அவ்வளவுதான். உடனே வீட்டை விட்டு ஓடிச்சென்று லிஃப்டில் ஏறிய சிறுவன் நேராக 14-வது தளத்திற்கு சென்று நொடிப்பொழுதில் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே லோக்நாத் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மகனின் உடலை பார்த்து டாக்டர் தம்பதியர் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி