ஆப்நகரம்

ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்

ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் பள்ளி மாணவன் ஒருவன் தனது சக பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 16 Feb 2019, 10:21 pm
ஒருதலைக்காதலால் விழுப்புரத்தில் பள்ளி மாணவன் ஒருவன் தனது சக பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Thaali


விழுப்புரம் மாவட்டம் மாம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது வகுப்பறையில் உடன் பயிலும் சக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான்.

தனது விருப்பத்தை அந்த மாணவியிடமும் சிறுவன் தொிவித்துள்ளான். ஆனால், மாணவி அதற்கு சம்மதம் தொிவிக்கவில்லை. இதனால் அந்த மாணவன், மாணவிக்கு தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்து கொள்ளவும் மாணவியிடம் கேட்டுள்ளான்.

மாணவனின் செயலால் மனமுடைந்த மாணவி யாருடனும் சரியாக பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவன் அந்த மாணவியிடம் தொந்தரவு செய்துள்ளான். மேலும் மாணவிக்கே தொியாமல் பின் பகுதியில் இருந்து தாலியும் கட்டியுள்ளான்.

இதனால் அதிா்ந்துபோன மாணவன் தனது பெற்றோரிடம் இது குறித்து தொிவித்துள்ளாா். பெற்றோரும் அந்த தாளியை கழற்றி எறிந்துவிட்டு பள்ளி நிா்வாகத்திடம் முறையிட்டுள்ளனா். இது தொடா்பாக விசாரணை நடத்திய பள்ளி நிா்வாகம், இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.

இதனைத் தொடா்ந்து பொதுத்தோ்வு நடைபெறவுள்ள நிலையில் 10ம் வகுப்பு படிக்கும் இருவரின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தொிவித்துள்ளனா். அதன் அடிப்படையில் இரு தரப்பினரும் கலைந்து சென்றனா்.

அடுத்த செய்தி