ஆப்நகரம்

மனைவியின் உடலுறுப்புகளை தானம் செய்து 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய கணவன்!!

மதுரையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். அதனால், 4 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது

Samayam Tamil 30 Jan 2018, 10:24 pm
மதுரை: மதுரையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். அதனால், 4 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil brain dead madurai woman saves four lives
மனைவியின் உடலுறுப்புகளை தானம் செய்து 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய கணவன்!!


மதுரை திருநகரைச் சேர்ந்தவர் காந்திமதிநாதன், இவரது மனைவி அருணா (40) கடந்த 28ஆம் தேதி உறவினர் ஒருவரின் வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு ஏற்பட்ட விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர்.

இதன்பின், அவரின் நுரையீரல் மற்றும் சிறுநீரகம் அதே மருத்துவமனையில் உள்ள இரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் திருச்சி அப்பலோ மருத்துவமனையில் உள்ள ஒரு நோயாளிக்கும், இதயம் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.

அடுத்த செய்தி