ஆப்நகரம்

தன் மரணத்திலும் 7 பேருக்கு வாழ்வு அளித்த கரூர் இளைஞர் !

கரூர் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரிடன் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.

Samayam Tamil 4 Oct 2018, 11:17 am
பைக் விபத்தில், மூளைச்சாவு அடைந்த மருத்துவ மாணவரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
Samayam Tamil donation


கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் அஜய் சில்வஸ்டர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்து வந்தார்.காரைக்காலுக்கு, நண்பர்களுடன் பைக்கில் சென்றபோதுஏற்பட்ட விபத்தில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தனர். இதனால் அஜய் சில்வஸ்டர் குடும்பத்தினர்,அவரதுஉடல் உறுப்புகளை தானம் வழங்க முன் வந்தனர்.

இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கருவிழி ஆகியவை தானமாக வழங்கபட்டன. இதில், சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழிகள் ஜிப்மர் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னை மருத்துவமனைக்கும் வழங்கபட்டன. ’இந்த உடல் உறுப்புகள், தேவையான ஏழு பேருக்கு பொருத்தப்படும் என, ஜிப்மர் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அஜய் சில்வஸ்டர் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த ஜிப்மர் இயக்குநர் டாக்டர் விவேகானந்தம், “ஏழ்மையான குடும்பச் சூழலிலும் தங்கள் மகன் மூலம் உயிருக்கு போராடும் 7 பேருக்கு உடல் உறுப்புகளை தானம் செய்து முன் மாதிரியாகியுள்ளனர். மேலும் உடல் உறுப்பு தானம் பெற்ற அனைவரும் நலமாக உள்ளனர்” என்றும் மருத்துவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி