ஆப்நகரம்

தினகரனின் புரோக்கர் சுகேஷின் சொகுசு கார்கள் பறிமுதல்

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலர் தினகரனுக்கு இரட்டை இலை சின்ன விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்டவரின் நண்பரிடம் இருந்து 8 வெளிநாட்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

TNN & Agencies 15 Nov 2017, 1:01 pm
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலர் தினகரனுக்கு இரட்டை இலை சின்ன விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்டவரின் நண்பரிடம் இருந்து 8 வெளிநாட்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil broker of ttv dinakaran costly cars were seized by income tax department officials
தினகரனின் புரோக்கர் சுகேஷின் சொகுசு கார்கள் பறிமுதல்


தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தைப் அதிமுக அம்மா அணிக்கு பெற்றுத் தருவதாக கூறி தினகரனுக்கு புரோக்கராக செயல்பட்டவர் சிக்கியவர் சுகேஷ். தற்போது இவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சுகேஷ்.

இந்நிலையில் கடந்த 8, 10 தேதிகளில் கர்நாடகா வருமான வரித்துறை அதிகாரிகள் கொச்சியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுகேஷின் முக்கிய பங்காலி நவாஸை இலக்கு வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

அப்போது வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் நவாஸ் சொகுசு கார்களை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 8 சொகுசு கார்கள் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை பறிமுதக் செய்தனர்.

இந்த சொகுசு கார்கள் சுகேஷூக்கு சொந்தமானவையா? அல்லது வேறு யாருக்காகவும் சுகேஷ் வாங்கி பதுக்கி வைத்திருந்தாரா? என்பது குறித்து வருமானவரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அடுத்த செய்தி