ஆப்நகரம்

கருணாநிதிக்கு வெண்கல சிலை; மாவட்ட ஆட்சியருக்கு அழகிரி கடிதம்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதிக்க கோரி அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 7 Sep 2018, 10:11 pm
மதுரை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதிக்க கோரி அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil MK Azhagiri


திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின், மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் திமுகவில் சேர மு.க.அழகிரி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார். அதில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.அழகிரி, மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக திட்டங்களை இயற்றியவருமான கருணாநிதியின் மறைவை, உண்மை தொண்டர்களும், தமிழர்களும் தாங்கிக் கொள்ள இயலாமல் கண்ணீர் வடிக்கின்றனர்.

அவருக்கு நான் 35 ஆண்டுகளாக வாழும் மதுரையில் பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலையை அமைக்க அனுமதி வழங்கி உதவிட வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Bronze Statue for Karunanidhi, Azhagiri letter to Madurai Collector.

அடுத்த செய்தி