ஆப்நகரம்

தஞ்சை அருகே கோவில் கிணற்றில் இருந்து புத்தர் சிலை மீட்பு!

கோவில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட புத்தர் சிலையை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

TIMESOFINDIA.COM 4 Sep 2018, 7:24 pm
திருச்சி: கோவில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட புத்தர் சிலையை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
Samayam Tamil Buddha Statue


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த செங்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அருகிலுள்ள நட்டாணிக்கோட்டை முனியசாமி கோவிலுக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள கிணற்றில் குளிக்க முடிவு செய்து இறங்கினார். அப்போது ஏதோ ஒரு பொருள் மீது அவருடைய கால் இடித்துள்ளது. பின்னர் அதனை எடுக்க முயற்சித்தார். அப்போது தான் தெரிந்தது காலில் இடித்தது புத்தர் சிலை என்று.

அதன் எடை ஒன்றரை கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த சிலையை பேராவூரணி தாசில்தார் பாஸ்கரனிடம் முருகேசன் ஒப்படைத்தார். பின்னர் தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் சிலையை ஆய்வுக்கு உட்படுத்தி, சிலையில் வயது மற்றும் விவரங்களை தெரிவிப்பர் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தார்.

Buddha statue unearthed from temple tank near Thanjavur.

அடுத்த செய்தி