ஆப்நகரம்

நீர் வீணாக கடலில் கலக்கிறது; அதைத் தடுக்கவே அணை - கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமார்!

சென்னை: புதிதாக கட்டப்படும் அணை குறித்து அமைச்சர் டிகே சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 9 Dec 2018, 1:03 pm
காவிரியின் குறுக்கே மேகதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil TK Sivakumar


இதனால் அதிருப்தியடைந்த தமிழக அரசு, வரைவு திட்டத்தை தயாரித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேகதாட்டு அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் மேகதாட்டு பகுதியில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் சென்னை வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டேன். ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை. தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை.

நாங்கள் சகோதரர்கள். மேகதாட்டு அணை திட்டம் தமிழகத்திற்கே மிகுந்த பயனைத் தரும். இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே நாங்கள் அணை கட்டுகிறோம். எங்களது முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறினார்.

அடுத்த செய்தி