ஆப்நகரம்

வேலூரில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!

மேல்மொனவூர் பாலாற்றில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 18 Mar 2019, 1:06 pm
தேர்தலை காரணம் காட்டி மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி சீட்டு வழங்காததால், மேல்மொனவூர் பாலாற்றில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil வேலூரில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!
வேலூரில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!


வேலூர் ஆட்சியர் ராமன், மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் மாட்டு வண்டிகளுக்கென, தனியாக புதியதாக மணல்குவாரி அமைக்க அனுமதி வழங்கினார்.

அன்று முதல் மேல்மொனவூர் பாலாற்றில் குவாரி துவங்கப்பட்டு, அரசு மாட்டு வண்டிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கி முறைப்படி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள், குவாரியில் மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ள அனுமதி சீட்டு வழங்க மறுத்து வருகின்றனர். இதனால் இன்று வழக்கம் போல் மணல் அள்ள வந்த 700-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை, தொழிலாளர்கள் பாலாற்றில் நிறுத்தி வைத்தனர்.

மணல் மாட்டு வண்டி தொழிலை நம்பி 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளதாகவும், அதிகாரிகள் இந்த திடீர் முடிவை கைவிட்டு வழக்கம் போல் மணல் அள்ள சீட்டு வழங்க கோரி பாலாற்றின் மையப்பகுதியில் மாட்டு வண்டிகளை, மாடுகளுடன் நிறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாகவும், உடனடியாக மணல்குவாரி மீண்டும் பழைய படி செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். பாலாற்றில் பந்தல் அமைத்து காலவரையற்ற உண்ணாவிரதத்திலும் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

அடுத்த செய்தி