ஆப்நகரம்

பேருந்து விபத்தில் பிறந்து 3 மாதமே ஆன குழந்தை பலி

மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் பிறந்து போன்று மாதமே ஆன குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

TNN 24 Apr 2016, 3:29 pm
சென்னை: மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் பிறந்து போன்று மாதமே ஆன குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil bus accident 3 people death including infant
பேருந்து விபத்தில் பிறந்து 3 மாதமே ஆன குழந்தை பலி


சென்னையில் இருந்து பேராவூரணி சென்ற ஆம்னி பேருந்து மயிலாடுதுறை அருகே சென்ற போது, வளைவில் திரும்புகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிறந்து போன்று மாதமே ஆன குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி