ஆப்நகரம்

அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பறந்து விபத்து

வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சேர்க்காடு செல்லும் அரசு பஸ் வேகமாக சென்று கொண்டிருக்கும் பொழுது அதன் மேற்கூரை தீடீரென பறந்தது. அவ்வழியாக சென்ற தம்பதிகள் மீது மேற்கூரை விழுந்ததால் படுகாயமடைந்தனர்.

TNN 4 Aug 2016, 6:02 pm
வேலூர் : வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சேர்க்காடு செல்லும் அரசு பஸ் வேகமாக சென்று கொண்டிருக்கும் பொழுது அதன் மேற்கூரை தீடீரென பறந்தது. அவ்வழியாக சென்ற தம்பதிகள் மீது மேற்கூரை விழுந்ததால் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil bus accident in vellore
அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பறந்து விபத்து


தமிழக அரசால் புதிய பேருந்துகள் அவ்வப்போது வாங்கப்பட்டு இயக்கப்பட்டாலும், பல்வேறு பகுதிகளில் மிகவும் பழைய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல படிகட்டுகள், கண்ணாடிகள், இருக்கைகள் ஆகியவை உடைந்த நிலையில் அவ்வப்போது பழுதடைந்து நடுவழியில் நிற்கும் நிலையில் உள்ளது.

வேலூரின் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சேர்க்காடுக்கு செல்லும் அரசு பேருந்து, அதன் தடம் எண் 14. நேற்று மதியம் சேர்க்காடு நோக்கி சென்ற ஒரு அரசு பேருந்து, வேலூரின் பாலாறு புதிய மேமாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் மேற்கூரை திடீரென பறந்து, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதிகள் மீது விழுந்தது. இதனால் அந்த தம்பதிகள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினர்

பேருந்தில் இருந்தவர்களும், அவ்வழியாக வந்தவர்களும் அந்த தம்பதிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழைய பேருந்துகளை ஓட்டும் ஓட்டுனர்கள் பலர் புலம்பிய படி ஓட்டுகின்றனர். சரியாக பராமரிக்கப்படுவதில்லை, மற்றும் பலமுறை பழுதாகுதல், பேருந்தின் ஆயுள் காலம் முடிந்த நிலையில் இயக்குதல் என பல்வேறு சிரமங்கள் உள்ளன என புலம்புகின்றனர்.

அடுத்த செய்தி