ஆப்நகரம்

புதுக்கோட்டையில் அரசு பேருந்து மோதி 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

TNN 12 Jun 2016, 9:59 pm
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Samayam Tamil bus accident kills 2 in pudukottai
புதுக்கோட்டையில் அரசு பேருந்து மோதி 2 பேர் பலி


குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (48) மற்றும் சிவசங்கர் (31) ஆகியோர் கோயில் திருவிழாவிற்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கந்தர்வகோட்டை அருகே, அரவம்பட்டி விலக்கு அருகே வரும் போது, தஞ்சாவூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து இவர்கள் மீது மோதியது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அரசு பேருந்து டிரைவர் தப்பி ஓடி விட்டார். விபத்து குறித்து கந்தவர்வகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி