ஆப்நகரம்

மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

TNN 15 May 2017, 8:08 am
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
Samayam Tamil bus mirrors breakage happens in many places in tamilnadu
மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு


அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, பனி நிரந்தரம், ஓய்வூதிய பணப்பலன்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்டும் விதமாக மாற்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களைக் கொண்டு மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், கூடுதலாக தனியார் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கபட்டு வரும் அரசுப் பேருந்துகள் தகுந்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு முக்கிய இடங்கள், பணிமனைகள் உள்ளிட்டவைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் 23பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாநகரில் மாநகர அரசுப்பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. அதேபோல், சென்னை குரோம்பேட்டை, போரூர், ஓட்டேரி மற்றும் விழுப்புரம், கோபிசெட்டிபாளையம், செய்யாறு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Bus Mirrors breakage happens in many places in tamilnadu

அடுத்த செய்தி