ஆப்நகரம்

ஆம்னி பேருந்தில் ஆட்டையப் போட முயன்ற ஆசாமிக்கு அடி உதை

சென்னையில் உள்ள ஆம்னி பேருந்து ஒன்றில் புகுந்து பயணிகளை மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற ஆசாமியை பயணிகளே மொத்துமொத்து என்று மொத்தினர்.

TOI Contributor 8 Jun 2017, 8:42 pm
சென்னையில் உள்ள ஆம்னி பேருந்து ஒன்றில் புகுந்து பயணிகளை மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற ஆசாமியை பயணிகளே மொத்துமொத்து என்று மொத்தினர்.
Samayam Tamil bus passengers overpower knife wielding gang that tried to rob them in chennai
ஆம்னி பேருந்தில் ஆட்டையப் போட முயன்ற ஆசாமிக்கு அடி உதை


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள கேபிஎன் தனியார் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் புதன்கிழமை இரவு புகுந்த திருட்டுப் பேர்வழிகள் பயணிகளிடம் களவாடிச் செல்லும் திட்டத்துடன் வந்துள்ளனர்.

கோவை செல்லவிருந்த அந்த பேருந்தில் புகுந்த திருட்டு கும்பலில் ஒருவன் கத்தியைக் காட்டி ஓட்டுநரை மிரட்டி பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுமாறு கழுத்தில் கத்தி வைத்துள்ளான். அவனுடன் வந்த மற்ற நான்கு திருட்டுப் பயல்களும் பயணிகளை மிரட்டி கொள்ளையடிக்கப் பார்த்துள்ளனர்.

ஆனால், பயணிகள் சிலர் தைரியமாக அவர்கள் மேல் பாய்ந்து அவர்களைப் பிடிக்க முயன்றபோது, ஓட்டுநர் அருகே நின்ற ஆசாமியைத் தவிர மற்றவர்கள் எஸ்கேப் ஆகி ஓடியிருக்கிறார்கள். சிக்கிய ஆசாமி மீது பயணிகள் தங்கள் ஆத்திரத்தைக் காட்டி மொத்து மொத்து என்று மொத்திவிட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவனைப் பார்த்த போலீசார் அவனது பெயர் தினேஷ் என்றும் ஏற்கெனவே பல வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் டிமிக்கி கொடுத்துவந்தவன் என்றும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து, தப்பியோடியவர்களுக்கு வலைவீசியுள்ளனர்.

அடுத்த செய்தி