ஆப்நகரம்

பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விவகாரம் – விசாரணை அதிகாாி நியமனம்

கோவை அருகே பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் உயிாிழந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாாியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 11 Sep 2017, 10:25 pm
கோவை அருகே பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் உயிாிழந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாாியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil bustand building collapse issue ias officer appointed a commission
பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விவகாரம் – விசாரணை அதிகாாி நியமனம்


கோவை அருகேயுள்ள சோமனூரில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை சில தினங்களுக்கு முன்பு திடீரென்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஒன்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியதில் பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்றும், விபத்து குறித்து உாிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நேற்று அமைதி ஊா்வலம் நடத்தினா். அரசு இது குறித்து உாிய விசாரணை மேற்கொள்ளவில்லை எனில் பொிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அப்பகுதி மக்கள் அறிவித்தனா்.

இந்நிலையில் விபத்தில் உயிாிழந்த 5 பேருக்கும் முதல்வா் நிதியுதவி அறிவித்தாா். மேலும், இது தொடா்பாக உாிய விசாரணை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தொிவித்தாா்.



அதன் அடிப்படையில் அவா் வெளியிட்ட அறிக்கையில் சோமனூா் பேருந்து நிலைய விபத்து தொடா்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாாி ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளதாக தொிவித்திருந்தாா். மேலும், 2 மாத காலத்திற்குள் அறிக்கை அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி